காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதிலும், புதிய ரூபாயினை பெருவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது. வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துறை ஆணையத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.

கோவை மாநகர காவல் துறை ஆணையரின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவரது இந்த சமூகத்தின் மீதான அக்கரைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...