நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் வெள்ளிவிழா

கோவை: ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கில் இன்று இந்தியாவின் முதன்மை பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். 



பின்னர், அவர் பேசுகையில்:-
கோவை மண்டல அலுவலகம் 1991ம் ஆண்டு 25 கோடியில் பிரீமியம் துவங்கப்பட்டு 2001ம் ஆண்டில் 100 கோடியை தாண்டியது. 2015-16ம் ஆண்டில் மதுரை, கோவை மண்டலம் சேர்ந்து 557 கோடி பிரீமியத்தை எட்டியது. மேலும் 2016-17ம் ஆண்டில் 710 கோடி பிரீமியத்தை அடைய திட்டமிட்டுள்ளது. கோவை மண்டல அலுவலகம் இன்று கோட்ட அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் என 77 அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் 100 அலுவலகங்கள் விரைவில் அடையும் என நம்பிக்கை உள்ளது. இந்திய மற்றும் உலகளவில் மாபெறும் சாதனைகளை செய்து மிகவும் சக்திவாய்ந்த காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் முன்னோடியாக இன்று திகழ்கிறது. 

இந்தியாவில், பொது காப்பீட்டு திட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு 97 ஆராயிரம் கோடியாக, இருந்த பிரீமியம் இந்த ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் வரை வளர்ந்துள்ளது. இது தொடர்ந்து வளர்ந்து 2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி வரை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2025ல் நியூ இந்தியா அசுரன்ஸ் 1 லட்சம் கோடி ரூபாய் பிரீமியம் எட்டும் என நம்புகிறேன். இன்று பொது காப்பீட்டு துறை பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்நிய முதலீட்டில் 26 சதவீதம் முதல் 49 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல புதிய நெறிமுறைகளை கையாளும் நிலையை கொண்டுள்ளது. பல்வேறு புதிய நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மிகவும் சீறிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு  சேவை செய்தால் மட்டுமே நாம் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்த முடியும் என அவர் கூறினார்.



பின்னர், நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு மலரை அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். அதன்பின் நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் அவிநாசி புதிய கிளையின் அடிக்கல்நாட்டு பலகையை திறந்து வைத்தார்.









இதில், அந்நிறுவனத்தின் பொது மேலாளர் நரம்புநாதன், துணை பொது மேலாளர் ஆதியப்பன், மண்டல மேலாளர் பிரபாகர ராவ் மற்றும் அந்நிறுவனத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...