முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலக்குறைவு எதிரொலி: கோவையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் நள்ளிரவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நள்ளிரவே மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். 

இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இயல்பாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...