கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லவாடி பகுதியை சேர்ந்தவர் சூரியன் (21). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில் நேற்று, இவர் தனது நண்பர்களான இளங்கோ மற்றும் கவுசிக் என்ற இருவருடன் இருசக்கர வாகனத்தில் கொடிசியா நோக்கி சென்றார். அப்போது அவிநாசி சாலையில் வந்த கார் சூரியன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மூவரும் தூக்கியெறியப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அவர்கள் வந்த வாகனம் தீப்பிடித்தது. சம்பவம் அறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், மாணவர்களின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். தொடர்ந்து காரை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பரத் (26) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...