மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சிக்குட்பட்ட மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மற்றும் மக்கும் குப்பைகளை  அந்தந்த நிறுவனங்களே சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத குப்கைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கோவை மாநகராட்சி மற்றும் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் அனைத்து குடியிருப்புகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறக் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தளங்கள், விளையாட்டு மைதானங்கள், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சந்தை சார்ந்த சங்கங்கள் சேகரம் செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

மேலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் மேற்கண்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மேலும், மக்கும் குப்பைகளை அந்தந்த நிறுவனங்களே தமது சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை 2017 மார்ச் 31ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும். 

மேற்படி பணிகளை மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப உதவிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கோவை மாநகராட்சியை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...