பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு?


பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியை அடுத்த தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் கேரள அரசு தடுப்பனை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.



இதற்காக அந்த பகுதிகளில் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கபட்டுள்ளன. இந்த தடுப்பணையின் உயரம் 12 அடி அகலம் 30அடி நீளம் மற்றும் 200 அடி ஆழம் வரை இருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. கேரள அரசின் இந்த முயற்சியால் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவர்.

முன்னதாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இரு இடங்களில் தடுப்பணை கட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.



Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...