சிறைகளைதிகளுக்கு பழங்களை கொண்டு செல்வதில் கட்டுப்பாடு விதிப்பதாகவும் சிறையில் கைதிகளை சித்ரவதை செய்வதாகவும் குற்றம்சாட்டி பாபுளர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மத்திய சிறை முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மத்திய சிறையில் உள்ள சிறைகைதுகளை சந்திக்க வருபவர்கள், கைதிகளுக்காக கொண்டு வரும் பழங்களை கொடுக்க சிறைதுறை அதிகாரிகள் சில நேரங்கள் மட்டுமே அனுமதி வழங்குவதாகவும், பல நேரங்களில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனைகண்டித்து கோவை பாபுளர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள், கைதிகளுக்கு வழங்க அனுமதிக்கும் பழங்களின் விவரம் குறித்து தெளிவாக அறிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோவை மத்திய சிறைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறைதுறை கண்காணிப்பாளர் கைதிகளை சித்த்ரவதை செய்வதாகவும், சிறையில் மனித உரிமை மீறல்கல் நடைபெறூவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து சிறைதுறை கட்டிடங்கள் கட்டுவது என 4 கோடி ரூபார் வரை ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவதாக அப்போது தெரிவித்தனர். மேலும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகவும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து சிறைதுறை கண்காணிபாளர் கூறுகையில், விரைவில் கிரிமி தொற்று உள்ள பழங்கள் மட்டுமே அனுமதிக்க மறுப்பதாகவும் மற்ற அனைத்து பல வகைகளும் அனுமதித்து வருவதாக தெரிவித்தார்.