செம்பு கட்டிகளை தங்க கட்டி என விற்று ரூ. 7 லட்சம் மோசடி
கோவை: செம்பு கட்டிகளை தங்க கட்டிகள் என கூறி ரூ. 7,22,000 மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த காளிசாமி என்பவர் மீது கோவை மாநகர காவல் ஆனையரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
ஸ்ரீ ரங்கம் இனாம் குளத்தூர் பகுதியில் எம்.கே. பேங்கர் என்னும் நகை அடகு கடை நடத்தி வருபவர் குமார். இவரின் உறவினர் மூலம் காளிசாமி என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அப்பொழுது இருவரும் கூட்டாக இணைந்து தொழில் செய்யலாம் எனவும், தனக்கு தொழில் ரீதியாக பலரை தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக குமார் தெரிவித்தர்.
இதனையடுத்து, கோவை மார்கெட் விலையை விட குறைவான விலையில், ஒருவர் தங்கம் கொடுக்க தயாராக உள்ளதாக கூறி பணத்துடன் கோவை வருமாறு காளிசாமி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பணத்துடன் கோவை வந்த குமாரிடம், செம்பு கட்டிகளை கொடுத்து விட்டு, ரூ. 500000 பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தங்க கட்டிகளை சோதனை செய்து பார்த்ததில், அவை அனைத்தும் செம்பு கட்டிகள் என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, காளிசாமியிடம் தொடர்பு கொண்டு செம்பு கட்டிகள் குறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக குமார் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.