ஜெம் மருத்துவமனை முதல் முறையாக தென்னிந்தியாவில் லேப்பிராஸ்கோப்பி மூலம் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை


ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் மெதந்தா இணைந்து முதல் முறையாக தென்னிந்தியாவில்  கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை லேப்பிராஸ்கோப்பி முறையில் செய்துள்ளது. ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை செய்தார். மெதந்தாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாயின் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 



கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் என்பவர் கல்லீரல் நோயால் 1 வருட காலமாக அவதிப்பட்டு வந்தார். இதில் அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அவரது மனைவி ஷீபா மூலமாக தனது வலது பக்க கல்லீரலை தானமாக வழங்கினார். எனவே அவருக்கு லேப்பிராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஷீபா 4-5 நாட்களில் குணமடைந்து விட்டார். அவரது கணவர் இன்னும் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினார். 

இது குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில்; வெளிநாடுகளில் 72-80 சதவீதம் வரை அதிக அளவில் உடலுறுப்பு தானம் மூலமாக லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இந்தவகையான உடலுறுப்பு தானத்தில் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு இரண்டு வகையாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றொன்று நெருங்கிய சொந்தங்கள் - வேறு பல காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களால் உறுப்பு தானம் செய்ய மேலை நாடுகள் போல் முன்வருவதில்லை. இதனால் இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தில் சொந்தபந்தங்கள் உறுப்பு தானம் அதிக அளவில் உள்ளது. கல்லீரல் தானம் செய்தால் 35-40 நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும் இத்தனித்தன்மை கல்லீரலுக்கு மட்டுமே உள்ளது. கல்லீரலை பெற்று கொண்டவர்களுக்கும் அக்கல்லீரல் 1-2 மாதங்களில் வளர்ந்து விடும். இதுபோன்ற கல்லீரல் தானம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தெனிந்தியாவில் ஜெம் மருத்துவமனை முதல் முறையாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...