சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாளை வாக்களிக்க வேண்டும், முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வர முடியாத சூழல் இருப்பதை உணர்ந்து பெரும்பான்மை கோரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நாளை நடைபெறும் பெரும்பான்மை நிரூபிக்கும் தேர்தலில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அத்தொகுதியின் பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை கணபதி பகுதியில் பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் மாநகர மேயருமான கணபதி ராஜ்குமார் தலைமையில் கூடிய அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினரான பி.ஆர்.ஜி அருண்குமார் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வாக்களிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.அப்போது பேசிய கணபதி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூவத்தூரில் இருப்பது மட்டுமே ஊடகங்கள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கவனத்திற்கு மக்களின் எண்ணங்களையும், கட்சி தொண்டர்களின் மன நிலையையும் எடுத்து கூறும் வகையில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாக்களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வாக்குகள் கோரி மக்களை சந்திக்க வர முடியாத நிலை இருப்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறிய அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு  இல்லாதவர்களும் கட்சியை கைப்பற்ற துடிக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...