ஈஷா மையத்திற்கு பிரதமர் வருவதை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவல் துறையினர்

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை வருவதை முன்னிட்டு 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை கோவை வருகின்றார்.

பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் மையத்தினை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி தலைமையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு (என்.எஸ்.ஜி) மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு, இந்திய விமானப்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் தொடந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதில், வானிலை மாற்றம் காரணமாக ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் விமான நிலையத்தில் இருந்து தரைவழி பயணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்ல குண்டு துளைக்காக காரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியான செம்மேடு, முட்டத்துவயல், இருட்டுபள்ளம், ஆலாந்துறை ஆகிய பகுதிகள் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...