துப்புரவு தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

கோவையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் கடந்த சனிக்கிழமை கக்கன் நகர் பகுதியில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாரிமுத்து துப்புரவு தொழிலாளி கனகராஜினை தாக்கிதாக கூறப்படுகின்றது. இதில் காயமடைந்த கனகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், இதுவரை கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.



இந்நிலையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது துப்புரவு தொழிலாளி கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தினரை கலைந்துபோக சொல்லி காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் காவல் நிலையம் முன்பாக இருந்து போக மறுத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...