கோவை: தேர்தல் நடமுறை அமலில் உள்ளதை அடுத்து மே தினத்தை ஒட்டி கொடிகள் கட்ட கூடாது ஊர்வலகம் செல்ல கூடாது என தேர்தல் அதிகாரிகள் கூறுவது உழைக்கும் மக்களை அவதிக்கும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குற்றம்சாட்டினார்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தேர்தல் நடமுறைகள் அமலில் உள்ள நிலையில் மே தினத்தை முன்னிட்டு கொடிகள் கட்டவும் ஊர்வலம் போகவும் அனுமதிக்காத தேதர் அதிகாரிகள் ஆயிரகனக்கான மக்கள் பங்கேற்கும் கோவில் விழாக்களை மட்டும் நடத்த அனுமதிக்கறிது ஏன் என கேள்வி எழுப்பினார். உழைக்கும் மக்களை அவதிக்கும் இச்செயலை வருங்காலத்திலாவது தேர்தல் அதிகாரிகள் மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுவரை 60 கோடி ரூபாய் பிடித்ததாக கூறும் தேர்தல் ஆணையம் , இந்த பணத்திற்கு பின்னால் இருக்கு அரசியல் கட்சிகள் குறித்து வெளியிட வேண்டும் என வலியுறூத்தினார்.மேலும் எஞ்சி இருக்கும் நாட்களிலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 2003 குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது கிருஷ்ணா கோதாவரியில் கச்சா எண்ணை எடுப்பதாக போட்ட திட்டதின் தோல்வி மூலம் 19, 700 கோடி இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக . சட்டத்தை பயண்படுத்தி கொளை அடிப்பதிற்கு உதாரனமாக இச்செயலை செய்த கட்சி தான் தமிழகத்தில் ஊழலை ஒழிப்போம் என பிரசாரம் செய்தி வருவதாக 37 எம்.பிகளை வைத்துள்ள அதிமுக தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவது இல்லை.
இதுவரையிலும் மருத்துவப் படிப்புக்கு ஒரே தேர்வு நடத்தப்படும். மே 1-ம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள் எனக் குறியவர், மாநிலம் வாரியாக கல்வி தரம் வேறுபடும் நிலையில் மத்திய அரசு தான் விரும்பும் செயலை செய்வதற்கு பொது நுழைவு தேர்வு என்ற பெயரில் நலிந்தவர்களையும் பிறப்டுத்தப்பட்டவர்களையும் ஒதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். ஜனநாய முறை யை கடை பிடிக்காத ஆட்சி மாற வேண்டும் எனவும் திரும்பவும் திமுக குடும்ப அரசியல் வரக்கூடாது எனத் தெரிவித்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதிர்கட்சிகளுக்கு முழு வாய்ப்பு தரப்படும் எனக் கூறினார்.