கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில், தன்னம்பிக்கை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் வழிகாட்டினர். மேலும், மாணவர் இதழ் ‘Rise’ வெளியிடப்பட்டதுடன், சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. புதிய மாணவர்களை கல்லூரி வாழ்க்கைக்கு வரவேற்கும் வகையிலும், அவர்களின் கல்வி, தொழில்நுட்ப அறிவு, தலைமைத்துவம் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முக்கிய நிறுவன சாதனைகள் மற்றும் தலைமைத்துவக் குழுவினரை முதல்வர் டாக்டர் ஏ. சௌந்தரராஜன் அறிமுகப்படுத்தினார்.



முதலாம் நாள் நிகழ்ச்சியில் மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வதுடன், சமூகத்தின் மீதான அக்கறை மற்றும் பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தங்களிடம் உள்ள அறிவு மற்றும் திறமைகளை சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, முதலாம் ஆண்டு மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைகள், சாதனைகள் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட “ரைஸ்” (RISE) மாணவர் இதழ் வெளியிடப்பட்டது. இதழை டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

தொடர்ந்து, இந்திய அரசின் வருமான வரித்துறை கூடுதல் ஆணையரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1997 முதல் 2001ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவருமான ஏ. அருண், IRS, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். தனது கல்வி மற்றும் தொழில்முறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், மாணவர்கள் தங்களது இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்துக் கொண்டு, விடாமுயற்சி, நேர்மை மற்றும் தொடர் கற்றல் ஆகியவற்றின் மூலம் அவற்றை அடைய வேண்டும் என ஊக்கமளித்தார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மனிதவளத் தலைவரும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறை ஆர்வலருமான டாக்டர் சுசீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். இன்றைய வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து அவர் விளக்கினார். எதிர்கால தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவியும், ஹைதராபாத்தில் உள்ள அவேவா இண்டஸ்ட்ரியல் இன்டெலிஜென்ஸ் சாஃப்ட்வேர் & சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதன்மை தொழில்நுட்ப வல்லுநருமான காமினி லக்ஷ்மிநாராயணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.

விழாவின் போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய மாணவர்களின் கல்லூரி வாழ்க்கைக்கு பயனுள்ள தொடக்கமாக அமைந்த இந்நிகழ்ச்சி, கல்வியுடன் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு, தொழில்நுட்ப அறிவு மற்றும் தனித்திறன் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பேராசிரியர் டாக்டர் சக்திவேல் மற்றும் டாக்டர் விசித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி தொடக்க நிகழ்ச்ச...

Cyber Crime Awareness Programme Held at Karpagam Deemed University

A Cyber Crime Awareness Programme was organized at Karpagam Deemed University, Coimbatore on August 27, 2026. Additional...

National Equestrian Champions League Season 2 Kicks Off in Coimbatore

The second season of India's Equestrian Champions League commenced at the Equine Dreams ground in Molapalayam near Vella...

Passenger Alert: Tirunelveli–Mettupalayam Weekly Special Train Services Extended

Southern Railway has extended the service period of the Tirunelveli–Mettupalayam weekly special trains from September 6...

Kovai Kutralam Closed Tomorrow as Heavy Rains Trigger Flash Floods

The Forest Department has announced the closure of eco-tourism at Kovai Kutralam from August 29 until further notice due...

Two Youth Suffer Grievous Injuries in Separate Road Accidents in Coimbatore

Two young men sustained serious injuries in separate road accidents on Kalapatti Road and Trichy Road in Coimbatore on A...