வாழையின் விலை நிலையாக இருக்கும் - வேளாண் பல்கலை

கோவை: வாழையின் விலை நிலையாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை : வாழையின் விலை நிலையாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் வாழை 0.86 லட்சம் எக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 31.08 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையானது (2017-18) தெரிவித்துள்ளது. இந்தியாவில், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும்.

தமிழகத்தில், கோவை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. வரும் மாதங்களில் வாழையின் தேவைகள் அதிக அளவில் இருப்பதாலும், பருவமழை வருகை வாழையின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் படி கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 7ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன், கர்ப்பூரவள்ளி மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய நேந்திரன் விலை ஆய்வுகளையும் மற்றும் சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில் நவம்பர் - டிசம்பர், 2018 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.17–18, கர்ப்பூரவள்ளி ரூ.20-22 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.38-40 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter