நிலக்கோட்டை பகுதியில் பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் கவலை

நிலக்கோட்டையில் உள்ள பூச்சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது வறட்சி காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் இச்சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் பணத்தட்டுப்பாட்டால் ஒரு சில பூக்கள் அதிக வரத்து இருந்தும் விலை போகவில்லை. இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது. தங்கள் தோட்டங்களில் பூக்களை பறிப்பதற்கு கூலி கொடுக்கக் கூட விலை கிடைக்காததால் பூ விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நிலக்கோட்டை பூச்சந்தையில் வியாழக்கிழமை விலை நிலவரம் (கிலோவில்) மல்லிகை-ரூ.150, காக்கரட்டான்- ரூ.100, கனகாம்பரம்- ரூ.250, பிச்சி- ரூ.200, சம்மங்கி-ரூ.25, செவ்வந்தி- ரூ.10 முதல் ரூ. 20 வரை, ரோஜா-ரூ.20, கோழிக்கொண்டை- ரூ.30 என விற்கப்பட்டது.
 

Newsletter