மணிமுத்தாறு அணை மூடல்; அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து, மணிமுத்தாறு அணை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. 3 தினங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தலா 10 அடி உயர்ந்தது.

இந்நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 325.76 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 52 கனஅடி, கடனாநதி அணைக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணை மேலும் ஓரடி உயர்ந்து 32.20 அடியாகவும், சேர்வலாறு அணை 72.08 அடியாகவும், மணிமுத்தாறு அணை 34.85 அடியாகவும் இருந்தது.
பிற அணைகளின் நீர்மட்டம்: கடனாநதி 52.50 அடி, ராமநதி 36.50 அடி, கருப்பாநதி 44.75 அடி, குண்டாறு 21.75 அடி, அடவிநயினார் 65.75 அடி, வடக்குப் பச்சையாறு 3.25 அடி, நம்பியாறு 9.28 அடி, கொடுமுடியாறு 11.50 அடி.

Newsletter