2019-ம் ஆண்டின் சிறந்த சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்பு

கோவை : 2019-ம் ஆண்டின் சிறந்த சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : 2019-ம் ஆண்டின் சிறந்த சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- பெண் குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும்‌ தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24 அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தில்‌ மாநில அரசு சார்பாக சிறப்பாக சாதனை புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளுக்கு மாநில அரசு விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை மற்றும்‌ பாராட்டு பத்திரம்‌ வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2019ஆம்‌ ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு சிறப்பாக சாதனை புரிந்த பெண் குழந்தையைத் தேர்ந்தெடுக்கும்‌ பொருட்டு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது..

விண்ணப்பத்திற்கான தகுதிகள்‌ :-

5 வயதிற்கு மேல்‌ 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில்‌ வசிக்கும்‌ பெண்‌ குழந்தை (டிசம்பர்‌ 31) அன்றைய வயது

கீழ்க்கண்டவற்றில்‌ வீரதீர செயல்‌ புரிந்திருத்தல்‌ வேண்டும்‌.

1. பெண்கல்வி பெண்குழந்தை தொழிலாளர்‌ ஒழிப்பு

2. பெண்‌ குழந்தை திருமணத்தை தடுத்தல்‌

3. தற்காப்புக் கலையில்‌ மாநில அளவில்‌ சான்று பெற்றிருத்தல்‌

4. விளையாட்டில்‌ மாநில அளவில்‌ முதன்மை பெற்றிருத்தல்‌ வேறு ஏதாவது வகையில்‌ சிறப்பான/தனித்துவமான சாதனை செய்திருத்தல்‌

5. சமூக அவலங்கள்‌ மற்றும்‌ அதனை தீர்வு காண்பதற்கு புத்தகங்கள்‌ மற்றும்‌ கையேடுகள்‌ எழுதி வெளியிட்டிருத்தல்‌

6. ஆண்கள்‌ மட்டுமே சாதிக்க முடியும்‌ என்பது போன்ற செயல்களை பெண்கள்‌ சாதிக்க முடியும்‌ என்று சாதித்திருத்தல்‌

மேற்படி தகுதி வாய்ந்த பெண்குழந்தைகள்‌ விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர்‌, மாவட்ட சமூகநல அலுவலகம்‌, பழைய கட்டிடம்‌ (தரைதளம்‌), மாவட்ட ஆட்சியரகம்‌, கோவை‌ என்ற முகவரிக்கு அனைத்து சான்று விவரங்களுடன்‌ வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கேட்டுக் கொண்டார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...