தொடர் மழை காரணமாக கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நாளையும் விடுமுறை

கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நாளையும் (ஆக.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நாளையும் (ஆக.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், தொடர்ந்து, இடைவிடாது கனமழை பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இன்றும் மழை நீடித்ததால் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால், தொடர்ந்து, 2-வது நாளாக நாளையும் (ஆக.,10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவித்துள்ளார்.  

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...