தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ தொகுதி - 11 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ தொகுதி - 11 பணிக்காலியிடங்களுக்கு உரிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. மனுதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்‌.


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ தொகுதி - 11 பணிக்காலியிடங்களுக்கு உரிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. மனுதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்‌.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ மனுதாரர்கள்‌ தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ உள்ள தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ மூலம்‌ சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு 14.10.2019 (திங்கட்கிழமை)அன்று முதல்‌ கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மைய வளாகத்தில்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில்‌, பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படுவதுடன்‌ குழு விவாதம்‌, பாடவாரியாக வகுப்புகள்‌ மற்றும்‌ மாதிரித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு தேர்வில்‌ தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும்‌ செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கும்‌ சிறப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. ஆகவே போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர்‌ இவ்வாய்ப்பினைப்‌ பயன்படுத்தி இத்தேர்விற்கு விண்ணப்பித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மைய வளாகத்தில்‌ நடைபெறவுள்ள இலவச பயிற்சி வகுப்புகளில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்‌ மனுதாரர்கள்‌, தங்களது சுய விவரக்குறிப்பு மற்றும்‌ கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையத்திற்கு நேரிடையாகவோ அல்லது 8807333721 என்ற எண்ணில்‌ Whatsapp மூலமாகவோ தங்களது விவரங்களை வரும் அக்.,14ம் தேதிக்குள்‌ தெரிவிக்க வேண்டும்‌. இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு தேர்வில்‌ தேர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்‌ அடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...