கோவை மாநகராட்சியில்‌ புதிய மருத்துவ காப்பீடு திட்டம்‌ அமல் மாநகராட்சி ஆணையர்

கோவை : கோவை மாநகராட்சியில்‌ யுனைடெட்‌ இந்திய இன்சூரன்ஸ்‌ கம்பெனி மூலம் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்‌ அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகராட்சியில்‌ யுனைடெட்‌ இந்திய இன்சூரன்ஸ்‌ கம்பெனி மூலம் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்‌ அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில்‌ ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ (வாழ்க்கை துணை உட்பட) / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசாணை எண்‌ 222 நிதி (ஓய்வூதியத்துறை) நாள்‌.30.06.2018, அரசாணை எண்‌.73 ந.நி.கு.வ.துறை (ந.ப.3) நாள்‌.28.05.2019 படியும்‌ மற்றும்‌ மாநகராட்சி மாமன்ற தீர்மான எண்‌ 133 நாள்‌ 19.07.2019-ன்‌ படியும்‌, 01.10.2019 முதல்‌ புதிய மருத்துவ காப்பீடு திட்டம்‌ யுனைடெட்‌ இந்திய இன்சூரன்ஸ்‌ கம்பெனி மூலமாக இம்மாநகராட்சியில்‌ அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சியில்‌ ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ (வாழ்க்கை துணை உட்பட சேர்ந்த புகைப்படம்‌) / குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ புகைப்படத்துடன்‌ (Annexure Form 4) படிவம்‌ 4னை பூர்த்தி செய்து 29.11.2019-க்குள்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ சமாப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...