நீலகிரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்த நிலையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் இன்று இரவே முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் மழை பெய்யும் போது வெளியே செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...