அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'மகா' புயல்: கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்திற்கு தென்மேற்கே 220 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இதற்கு மகா (MAHA) என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தேனி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகையில் கடல் சீற்றத்தால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை புஷ்பவனம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. குமரியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...