பாலியல்‌ வன்முறைகளை தடுக்க அனைத்து அலுவலகங்களிலும்‌ புகார்‌ குழு அமைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

கோவை: மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ பெண்களின்‌ பாதுகாப்பிற்காகப் பலதிட்டங்கள்‌ மற்றும்‌ சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி பணிபுரியும்‌ இடங்களில்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறைகள்‌ தடுப்பதற்காக மத்திய அரசால்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை தடைசட்டம்‌ 2013 ஆண்டு நடை முறைப்படுத்தப்பட்டது.


கோவை: மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ பெண்களின்‌ பாதுகாப்பிற்காகப் பலதிட்டங்கள்‌ மற்றும்‌ சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி பணிபுரியும்‌ இடங்களில்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறைகள்‌ தடுப்பதற்காக மத்திய அரசால்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை தடைசட்டம்‌ 2013 ஆண்டு நடை முறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தில்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அனைத்து அரசுத்துறைகள்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ அமைக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, அவ்வாறு அமைக்கப்படும்‌ விசாரணைக்குழுவின்‌ தலைவராக ஒரு பெண்‌ அலுவலரை நியமிக்க வேண்டும்‌ எனவும்‌, இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும்‌, இத்துரையில்‌ நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்‌ எனவும்‌ விசாரணைக்கான வழிமுறைகள்‌ பற்றியும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசுத்துறை மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களின்‌ தலைமை அலுவலகங்களிலும்‌ கட்டாயம்‌ (Internal complaint committee) குழு அமைக்கப்பட. வேண்டும்‌. அனைத்து தலைமை அலுவலகங்களிலும்‌ புகார்‌ குழு அமைத்து அதன்‌ விபரத்தினை மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக தெரிவிக்குமாறும்‌, மாதாந்திர அறிக்கையினை ஒவ்வொரு மாதமும்‌ மாவட்ட சமூகநல அலுவலர்‌ கோயமுத்தூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உள்புகார்‌ குழு அமைக்கப்படாத நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும், உள்புகார்‌ குழு அமைப்பது தொடர்பான விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகம்‌. மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, கோவை. தொலைபேசி எண்‌ 0422-2305126 என்ற முகவரியில்‌ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்‌ என கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...