விவசாயிகளுக்கு தேவையான சான்றுகள் வழங்கும் சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: விவசாயிகளுக்கு தேவையான சான்றுகள் வழங்கும் சிறப்பு முகாமை பயன்படுத்தி அதிகளவில்‌ நுண்ணீர்பாசனம்‌ அமைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: விவசாயிகளுக்கு தேவையான சான்றுகள் வழங்கும் சிறப்பு முகாமை பயன்படுத்தி அதிகளவில்‌ நுண்ணீர்பாசனம்‌ அமைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்ட அறிக்கை தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில்‌ நுண்ணீர்‌ பாசனத்திட்டம்‌ - PMKSY (Per Drop More Crop) ஒவ்வொரு துளி நீரிலும்‌ அதிக பயிர் சாகுபடி என்ற நோக்கத்தினை அடிப்படையாகக்‌ கொண்டு நுண்ணீர்‌ பாசனத்திட்டம்‌ வேளாண்மைத்துறை மற்றும்‌ தோட்டக்கலைத்துறை மூலமாக கோவை மாவட்டத்திற்கு மொத்தமாக 12682 ஹெ பரப்பளவில்‌ ரூ.6160 லட்சம்‌ மானியம்‌ வழங்க இலக்கு தமிழக அரசால்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்‌ அனைத்து சிறு, குறு மற்றும்‌ பெரிய - விவசாயிகளும்‌ பயன்‌ பெறலாம்‌. சிறு குறு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம்‌ செய்துள்ள மானியத்தில்‌ 100 சதம்‌ 6 ஏக்கருக்குள்‌, மற்ற விவசாயிகளுக்கு 75 சதம்‌ மானியத்திலும்‌ (12.5 ஏக்கர்‌ வரை) சொட்டுநீர்‌ பாசனம்‌ அமைக்கலாம்‌ இத்திட்டத்தில்‌ விவசாயிகள்‌ பயன்பெறவும்‌ இதைத்தவிர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்‌ பயிர்‌ சாகுபடி கடன்‌ பெறவும்‌ ஆவணங்கள்‌ மற்றும்‌ சான்றுகள்‌ தேவைப்படுகிறது.

1) சிட்டா

2) நில வரைபடம்‌

3) ரேசன்‌ கார்டு

4) கூட்டு வரைபடம்‌

5) அடங்கல்‌

6) சிறு குறு விவசாயி சான்று (சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும்‌)

7) பயிர்‌ சாகுபடி சான்று

8) நில உரிமை ஆவணங்களின்‌ படி பாத்தியப்பட்ட பரப்பு

விவசாயிகளின்‌ தேவை கருத்தில்‌ கொண்டு நுண்ணீர்‌ பாசனம்‌ அமைக்கவும்‌, தொடக்க வேளாண்மை சங்கங்களிலிருந்து கடன்‌, பெறவும்‌ தேவையான ஆவணங்கள்‌ பெற, வருவாய்த்துறைமூலம்‌ சிறப்பு முகாம்‌ வரும்‌ 19.11.19 (செவ்வாய்‌ கிழமை) அன்று கோவை மாவட்டத்தில்‌ ஒவ்வொரு வருவாய்‌ ஆய்வாளர்‌ அலுவலகத்திலும்‌ காலை 10.00 மணி முதல்‌ 5.45 மணி வரை நடைபெறும்‌,

இம்முகாமில்‌ சிட்டா, அடங்கல்‌, நிலவரைபடம்‌ மற்றும்‌ சிறுகுறு விவசாயிகள்‌ சான்று உடனே பெறலாம்‌. எனவே. கோவை மாவட்ட விவசாயிகள்‌ அனைவரும்‌ இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, தேவைப்படும்‌ ஆவணங்களை பெற்று, அதிகளவில்‌ நுண்ணீர்பாசனம்‌ அமைத்து பயன்பெற மாவட்ட ஆட்சியர்‌ கேட்டு கொண்டுள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...