வரும் நவம்பர் 28ம் தேதி கிரயப்பத்திரம்‌ வழங்கும்‌ சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர்‌ தகவல்

கோவை மாவட்டம்‌, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால்‌ திலகர்‌ வீதி மற்றும்‌ புவனேஸ்வரி நகர்‌ திட்டப்பகுதிகளுக்கான கிரயப்பத்திரம்‌ வழங்கும்‌ சிறப்பு முகாம்‌ நாளை (நவ., 28) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்‌, கோவை கோட்ட அலுவலகத்தில்‌ நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை மாவட்டம்‌, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால்‌ திலகர்‌ வீதி மற்றும்‌ புவனேஸ்வரி நகர்‌ திட்டப்பகுதிகளுக்கான கிரயப்பத்திரம்‌ வழங்கும்‌ சிறப்பு முகாம்‌ நாளை (நவ., 28) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்‌, கோவை கோட்ட அலுவலகத்தில்‌ நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால்‌, அறிவிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளை தமிழ்நாடு நகர்ப்புற. வளர்ச்சி திட்டத்தின்‌ கீழ்‌ மேம்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்த நபர்களுக்கே, அவர்களின்‌ மனைகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டிருந்தது.

இத்திட்டப்பகுதியின்‌ நிலங்களை வாரியத்தின்‌ பெயரில்‌ நில உரிமை மாற்றம்‌ செய்வது தொடர்பாக உயர்‌ அலுவலர்கள்‌ கொண்ட செயலாக்கக்‌ குழு உருவாக்கப்பட்டது. இக்குழு எடுத்த முடிவுகளின்படி தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள 17 திட்டப்பகுதிகளின்‌ நிலங்கள்‌ வாரியத்தின்‌ பெயரில்‌ நில உரிமை மாற்றம்‌ செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ 2,368 மனை ஒதுக்கீடுதாரர்கள்‌ கிரய பத்திரம்‌ பெற்று பயனடைவார்கள்‌.

முதற்கட்டமாக கோவை கோட்டத்திற்கு உட்பட்ட தெலுங்கு பாளையம்‌ கிராமம்‌ க.ச.எண்‌.451 7/1, நகர அளவை எண்‌ 78 (பழைய சர்வே எண்‌ 474) திலகர்‌ வீதி 76 ஒதுக்கீடுதாரர்கள்‌ மற்றும்‌ புவனேஸ்வரி நகர்‌ 55 ஒதுக்கீடுதாரர்கள்‌ என மொத்தம்‌ 131 நபர்களின்‌ மனைக்கு கிரயப்பத்திரம்‌ வழங்கும்‌ சிறப்பு முகாம்‌

நடைபெறவுள்ளது.

இதில்‌, ஒதுக்கீடு தாரர்களிடமிருந்து மனுக்கள்‌ நேரடியாக பெறப்படும்‌. ஒதுக்கீடுதாரர்கள்‌ அல்லது வாரிசுதாரர்கள்‌ தாங்கள்‌ அளிக்கும்‌ மனுவுடன்‌ ஒதுக்கீடு ஆணை நகல்‌, இருப்பிட சான்றுகளாக உணவு பங்கீட்டு அட்டை, வாக்காளர்‌ அட்டை, ஆதார்‌ கார்டு ஆகியவற்றின்‌ நகல்கள்‌ இணைக்க வேண்டும்‌, வாரிசுதாரர்களாக இருந்தால்‌ ஒதுக்கீடுதாரரின்‌ இறப்பு சான்றிதழ்‌, வாரிசுதாரர்‌ சான்றிதழ்‌ அசல்‌ மற்றும்‌ மனைக்கு முழு கிரயம்‌ செலுத்திய ரசீது, கடன்‌ பெற்றிருந்தால்‌ கடன்‌ தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...