மழை வெள்ளம்‌, இயற்கை சீற்றங்கள்‌ குறித்து புகார்களை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும்‌ பொதுமக்கள்‌ தெரிவிக்கலாம்‌ - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ மழை, வெள்ளம்‌ மற்றும்‌ இயற்கை சீற்றங்கள்‌ குறித்து புகார்களை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும்‌ பொதுமக்கள்‌ தெரிவிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ மழை, வெள்ளம்‌ மற்றும்‌ இயற்கை சீற்றங்கள்‌ குறித்து புகார்களை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும்‌ பொதுமக்கள்‌ தெரிவிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளதாவது:-

வடகிழக்கு பருவமழை காரணமாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ அவ்வப்போது ஏற்படும்‌ மழை மற்றும்‌ அது தொடர்பான இயற்கை சீற்றத்தால்‌ ஏற்படும்‌ இடர்கள்‌ தொடர்பாக பொது மக்களிடமிருந்து வரப்பெறும்‌ புகார்களை பதிவு செய்து அப்புகார்களின்‌ அடிப்படையில்‌ உடனடி நிவாரப்பணிகள்‌ செய்ய ஏதுவாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அனைத்து மண்டல அலுவலகங்களிலும்‌ 24 மணி நேரம்‌ பணியாளர்கள்‌ பொதுமக்கள்‌ புகார்‌ தொடர்பாக பதிவு செய்யும்‌ பணிகளை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார்கள்‌.

மேலும்‌, வடக்கு மண்டல அலுவலகத்திற்கு 0422-2243133 என்ற எண்ணிற்கும்‌, தெற்கு மண்டலத்திற்கு 0422-2252482 என்ற எண்ணிற்கும்‌, கிழக்கு மண்டலத்திற்கு 0422-2577056, என்ற எண்ணிற்கும்‌, மேற்கு மண்டல அலுவலகத்திற்கு 0422-2551700 என்ற எண்ணிற்கும்‌, மத்திய மண்டல அலுவலகத்திற்கு 0422-2215618 என்ற எண்ணிற்கும்‌ பொதுமக்கள்‌ புகார்களை தெரிவிக்கலாம்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக தகவல்‌ மையத்திலுள்ள 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிற்கும்‌, 8190000200 என்ற வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணிற்கும்‌, 7440422422-என்ற எண்ணிற்கு குறுந்தகவல்‌ மூலமும்‌ தொடர்பு கொண்டு பொதுமக்கள்‌ புகார்களை தெரிவிக்கலாம்‌. பொதுமக்களின்‌ புகார்கள்‌ குறித்து சம்மந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்கள்‌ தகுந்த நிவாரணப்‌ பணிகளை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...