கோவையில் ஜன., 1ம்‌ தேதி முதல்‌ 17,166 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ - மாநகராட்சி ஆணையர்

கோவை: கடந்த ஜனவரி 1-ம்‌ தேதி முதல்‌ தற்போது வரை 17 ஆயிரத்து 166.5 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.26,87,300/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கடந்த ஜனவரி 1-ம்‌ தேதி முதல்‌ தற்போது வரை 17 ஆயிரத்து 166.5 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.26,87,300/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி, பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டினால்‌ ஏற்படும்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பாதிப்புகளை கருத்தில்‌ கொண்டு பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌, விற்பனை செய்தல்‌, சேமித்து வைத்தல்‌ மற்றும்‌ பயன்படுத்துதல்‌ ஜனவரி மாதம்‌ 1-ம்‌ தேதி முதல்‌ ஒருமுறை பயன்படுத்தி தாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ தடை விதிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்ததாவது:-

உணவுப்பொருட்களை மடிக்க பயன்படுத்தும்‌ பாலிதன்‌ அல்லது பிளாஸ்டிக்‌ தாள்‌, தெர்மாக்கோல்‌ தட்டுகள்‌, பிளாஸ்டிக்‌ பூசப்பட்ட காகித குவளைகள்‌, நீர் நிரப்ப பயன்படும்‌ பைகள்‌, பிளாஸ்டிக்‌ கொடிகள்‌, பிளாஸ்டிக்‌ விரிப்புகள்‌, டீ குவளைகள்‌, உறிஞ்சு குழல்கள்‌, பிளாஸ்டிக்‌ பைகள்‌ மற்றும்‌ நெய்யாத பிளாஸ்டிக்‌ பைகள்‌ போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாநகராட்சி பகுதியில்‌ உள்ள அனைத்து கடைகள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, அரசு மற்றும்‌ தனியார்‌ அலுவலகங்கள்‌, சிறு வியாபாரிகள்‌, மருத்துவமனைகள்‌, துணிக்கடைகள்‌, திருமண மண்டபங்கள்‌ மற்றும்‌ பிற இடங்களில்‌ மண்டல சுகாதார சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ குழுக்களாக பிரிந்து ஆய்வுகள்‌ மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு அபராதம்‌ விதிக்கப்பட்டு வருகிறது.

2019 ஜனவரி 1-ம்‌ தேதி முதல்‌ நாளது வரை 17,166.5 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு இதற்காக ரூ.26,87,300/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. நவம்பர்‌ மாதத்தில்‌ மட்டும்‌ 3686 கிலோவும்‌, ரூ.3,12,500/- அபராத தொகையும்‌ வசூல்‌ செய்யப்பட்டுள்ளது. 01.12.2019 மற்றும்‌ 02.12.2019 ஆகிய இரண்டு நாட்களில்‌ 2 டன்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு ரூ.1,00,000/- அபராதமாக வசூல்‌ செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, கோயம்புத்தார்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ உற்பத்தி, விற்பனை மற்றும்‌ பயன்பாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌ பொதுமக்கள்‌ தாமாக முனவந்து சம்மந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர்கள்‌, மாநகர நல அலுவலர்‌, துணை ஆணையாளர்‌ மற்றும்‌ ஆணையாளர்‌ அவர்களுக்கு தகவல்‌ அளிக்கும்‌ பட்சத்தில்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. பொதுமக்கள்‌ தங்கள்‌ தகவல்களை 0422-2302323, 0422-2390261, 0422-2390262, 0422-2390263, 0422-2395156 ஆகிய எண்களில்‌ தெரிவிக்கலாம்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...