கோவையில் டிச., 14ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்‌ செய்யலாம்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டத்தில்‌ 14.12.2019 சனிக்கிழமை அன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்‌ செய்யலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ 14.12.2019 சனிக்கிழமை அன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்‌ செய்யலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்‌ 27.12.2019 வெள்ளிக்கிழமை அன்றும்‌, 30.12.2019 திங்கட்கிழமையும்‌ இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத்‌ தேர்தல்களுக்கான தேர்தல்‌ அறிவிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ வெளியிட்டதைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 09.12.2019 முதல்‌ ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு வேட்புமனுக்கள்‌ பெறப்பட்டு வருகின்றது. வேட்புமனுக்களைப் பெறுவதற்கான கடைசி நாள்‌ 16.12.2019 ஆகும்‌. 14.12.2019 சனிக்கிழமை அன்று பொது விடுமுறை இல்லை என்பதால்‌ அன்றைய நாளில்‌ அனைத்து ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்களுக்கான தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களும்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களும்‌ வேட்புமனுக்களைப் பெறுவதற்காக 14.12.2019 அன்று அவர்களது அலுவலகத்தில்‌ இருக்க வேண்டும்‌ என்று தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 14.12.2019 சனிக்கிழமை அன்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள்‌ தங்களது வேட்புமனுவை தாக்கல்‌ செய்யலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌,/ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...