ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில்‌ தவறாமால்‌ பங்கேற்க வேண்டும்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை : கோவை மாவட்டம்‌, ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 21.12.2019, 26.12.2019, 29.12.2019 ஆகிய நாட்களில்‌ நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளுக்கான பணிநியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள்‌, அரசு அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள வேண்டும்‌ என மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை : கோவை மாவட்டம்‌, ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 21.12.2019, 26.12.2019, 29.12.2019 ஆகிய நாட்களில்‌ நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளுக்கான பணிநியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள்‌, அரசு அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள வேண்டும்‌ என மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தால்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்‌ 27.12.2019 வெள்ளிக்கிழமை அன்றும்‌, 30.12.2019 திங்கட்கிழமையும்‌ இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடத்திட அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ அறிவுரையின்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ சிறப்பான முறையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ 27.12.2019 மற்றும்‌ 30.12.2019 ஆகிய நாட்களில்‌ இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ நடைபெற உள்ள நிலையில்‌, தேர்தல்‌ பணியில்‌ அமர்த்தப்படவுள்ள 12060 நபர்களுக்கு நியமன ஆணைகள்‌ தொடர்புடைய துறைத்‌ தலைவர்கள்‌ மூலம்‌ சார்வு செய்யப்பட்டு, முதல்கட்ட பயிற்சி வகுப்புகள்‌ 15.12.2019 அன்று நடைபெற்றது.

மேலும்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ கட்ட பயிற்சி வகுப்புகள்‌ 21.12.2019, 26.12.2019, 29.12.2019 ஆகிய நாட்களில்‌ நடைபெறக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறவுள்ளன. இந்நிலையில்‌ முதற்கட்ட பயிற்சி வகுப்பில்‌ போதிய காரணமின்றி ஒருசில வாக்குப்பதிவு அலுவலர்கள்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ளாமல்‌ இருந்தது மாவட்ட தேர்தல்‌ அலுவலருக்கு தெரியவந்துள்ளது. பணிநியமன ஆணைகள்‌ பெற்றுள்ள ஆசிரியர்கள்‌, அரசு அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ தவறாமல்‌ அனைத்து பயிற்சி வகுப்புகளிலும்‌ தவறாமல்‌ கலந்துகொண்டு பயிற்சி பெற்று தேர்தல்‌ பணியை சிரத்தையோடு மேற்கொள்ள வேண்டும்‌.

தகுந்த காரணங்களோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலரின்‌ உரிய அனுமதியின்றி, இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாமலும்‌, தேர்தல்‌ பணியினை மேற்கொள்ளாமலும்‌, உள்ள சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள்‌ மீது தொடர்புடைய துறையின்‌ மூலம்‌ ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...