பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..! ஜன 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருநாள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாளும் நடைபெற வாய்ப்புள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்ற தமிழக தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்து முதல்கட்டத் தேர்தல் 27ந் தேதி முடிவடைந்து இரண்டாம் கட்டத்தேர்தல் இன்று 30ம் தேதி நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில் தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மறுநாள் 3ம் தேதியும் நீடிக்க வாய்ப்புள்ளதால், அரையாண்டு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...