வரும் ஜன., 8ம் தேதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உப்பிலிபாளையம்‌, பொன்னையராஜபுரம்‌, வெள்ளகிணர்‌ சுயநிதி திட்ட பகுதி மற்றும்‌ பெரியநாயக்கன்பாளையம்‌ மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜனவரி 8ம் தேதி குலுக்கல்‌ நடைபெறும்‌ என்று மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: à®•ோவை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உப்பிலிபாளையம்‌, பொன்னையராஜபுரம்‌, வெள்ளகிணர்‌ சுயநிதி திட்ட பகுதி மற்றும்‌ பெரியநாயக்கன்பாளையம்‌ மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜனவரி 8ம் தேதி குலுக்கல்‌ நடைபெறும்‌ என்று மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;-

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்‌, கோவை வீட்டுவசதி பிரிவு உப்பிலிபாளையம்‌ பகுதி-!, வெள்ளகிணார்‌ பகுதி ॥ நிலை ॥, பொன்னையராஜபுரம்‌ சுயநிதி திட்டப்பகுதிகளில்‌ உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்‌ மற்றும்‌ வீடுகளுக்கும்‌, பெரியநாயக்கன்பாளையம்‌ திட்டத்தில்‌ காலியாக உள்ள குடியிருப்பு மனைகளுக்கும்‌ கடந்த 22.11.2019 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு 08.01.2020 அன்று குலுக்கல்‌ முறையில்‌ குடியிருப்புகள்‌ மற்றும்‌ மனைகள்‌ தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது எனவும்‌ இக்குலுக்கல்‌ சிவானந்தா காலனி, டாடாபாத்தில்‌ உள்ள செயற்‌ பொறியாளர்‌ மற்றும்‌ நிர்வாக அலுவலர்‌, கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலக வளாகத்தில்‌ காலை 1100 மணியளவில்‌ நடைபெறும்‌ எனவும்‌, விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளுமாறு செயற்‌ பொறியாளர்‌ மற்றும்‌ நிர்வாக அலுவலர்‌, கோவை வீட்டு வசதிப்பிரிவு அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்து உள்ளார்‌. மேலும்‌ விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி மற்றும்‌ கைப்பேசி எண்ணில்‌ தொடர்பு கொள்ளவும்‌. தொலைபேசி- 0422 - 2493359 கைப்பேசி - 9790809317, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...