பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11ம் தேதி முதல்‌ கொடீசியா திடலில் இருந்து பேருந்துகள் இயக்கம்

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும்‌ பொருட்டு கோவையிலிருந்து சேலம்‌, திருச்சி மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகளை கொடீசியா திடலில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும்‌ பொருட்டு கோவையிலிருந்து சேலம்‌, திருச்சி மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகளை கொடீசியா திடலில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில்‌ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பயணிகள்‌ மற்றும்‌ வாகனங்கள்‌ வந்து செல்வதால்‌ கோவை காந்திபுரம்‌ டாக்டர்‌ நஞ்சப்பா சாலை, மத்தியப்‌ பேருந்து நிலையம்‌, நகரப்‌ பேருந்து நிலையம்‌ மற்றும்‌ அவினாசி சாலை ஆகிய இடங்களில்‌ மிகுந்த போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும்‌ வண்ணம் வரும் 11.01.2020 முதல்‌ 14.01.2020 வரை சேலம்‌, திருச்சி மார்க்கமாக செல்லும்‌ அனைத்து பேருந்துகளும்‌ கொடீசியா திடலில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதேசமயம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் - கொடீசியா திடல், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் - கொடீசியா திடல் என போதுமான அளவில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடீசியா திடலில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை வசதி ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...