கோவை ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்: புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்‌ வரும் ஜனவரி 06ம் தேதி பதவியேற்பர் - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்‌ வரும் ஜனவரி 06ம் தேதி பதவியேற்பர் என்று கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்‌ வரும் ஜனவரி 06ம் தேதி பதவியேற்பர் என்று கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ 2019-ல்‌ மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்தலைவர்‌ மற்றும் கிராம‌ ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ தேர்தலில்‌ புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்‌ பதவி ஏற்கும்‌ நாள்‌ 06.01.2020 முற்பகல்‌ 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கிலும்‌, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌களுக்கு சம்பந்தபட்ட ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கிலும், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி அவ்வகத்திலும்‌ நடைபெறும் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...