பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் கோவையில் இருந்து 430 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் கோவையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்களுக்காக 430 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக கோவை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் கோவையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்களுக்காக 430 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக கோவை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கோவையிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு மொத்தம் 430 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து கோவை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை, எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் 230 பேருந்துகள் சேலம் மார்க்கமாகவும், 200 பேருந்துகள் திருச்சி மார்க்கமாகவும் இயக்கப்படுகின்றன. அதேநேரம், காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் மார்க்கமாக ஏற்கெனவே 127 வழித்தடப் பேருந்துகள் மூலம் 184 நடைகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக 55 வழித்தடப் பேருந்துகள் மூலம் தினசரி 60 நடைகளும் இயக்கப்படுவதால் அந்தப் பேருந்து நிலையங்களில் ஏற்கெனவே இடப் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்காக மட்டும் கொடிசியா மைதானத்தில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சேலம், திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். மேலும், இந்தப் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து கொடிசியா மைதானத்துக்கு நகரப் பேருந்துகள் இயக்கவும், கொடிசியா மைதானத்தில் கழிப்பிடம், குடிநீர், நிழற்குடை வசதிகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...