வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை தனித்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: 2020ம்‌ ஆண்டு ஜூன்‌ மாதத்தில்‌ கைவினைஞர்‌ பயிற்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசிய தொழிற்‌ பயிற்சி குழுமத்தால்‌ (NCVT) நடத்தப்படும்‌ அகில இந்திய தொழிற்தேர்வில்‌ தனித்‌ தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.


கோவை: 2020ம்‌ ஆண்டு ஜூன்‌ மாதத்தில்‌ கைவினைஞர்‌ பயிற்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசிய தொழிற்‌ பயிற்சி குழுமத்தால்‌ (NCVT) நடத்தப்படும்‌ அகில இந்திய தொழிற்தேர்வில்‌ தனித்‌ தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. 

2020ம்‌ ஆண்டு ஜூன்‌ மாதத்தில்‌ கைவினைஞர்‌ பயிற்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசிய தொழிற்‌ பயிற்சி குழுமத்தால்‌ (NCVT) நடத்தப்படும்‌ அகில இந்திய தொழிற்தேர்வில்‌ தனித்‌ தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ்க்காணும்‌ தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

முதல்‌ வகை (Category 1); தேசிய தொழிற்சான்றிதழ்‌ பெற்ற விண்ணப்பதாரர்‌:




ஏற்கனவே ஏதேனும்‌ ஒரு தொழிற்பிரிவில்‌ ITI-ல்‌ பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள்‌ பயிற்சியாளர்‌ Allied தொழிற்பிரிவில்‌ 1 வருட பணி அனுபவம்‌ பெற்றிருந்தால்‌ அப்பிரிவில்‌ தேசிய தொழிற்சான்றிதழ்‌ பெறும்‌ பொருட்டு தனித்தேர்வராக à®µà®¿à®£à¯à®£à®ªà¯à®ªà®¿à®•்கலாம்‌.

இரண்டாம்‌ வகை (Category 2); தேசிய தொழிற்சான்றிதழ்‌ பெற்ற விண்ணப்பதாரர்‌;

திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ்‌ பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள்‌ பயின்ற செக்டாருடன்‌ தொடர்புடைய தொழிற்பிரிவில்‌ ஒரு வருட பணி அனுபவம்‌ பெற்றிருந்தால்‌ அப்பிரிவில்‌ தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்‌.

மூன்றாம் வகை(Category 3): ஆகஸ்ட்‌ 2018க்கு முன்‌ SCVT சேர்க்கை பெற்றவர்‌;

ஆகஸ்ட்‌ 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம்‌ (SCVT) தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள்‌ à®¤à®©à®¿à®¤à¯à®¤à¯‡à®°à¯à®µà®°à®¾à®• விண்ணப்பிக்கலாம்‌.

நான்காம்‌ வகை (Category 4): பிற விண்ணப்பதாரர்கள்;

1. விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ அவர்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கும்‌ நாளில்‌ 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. உச்ச வயது வரம்பு இல்லை. 

2. தொழிற்‌ பழகுநர்‌ சட்டத்தை செயல்படுத்தும்‌ நிறுவனங்கள்‌ தொழிற்‌ சாலை சட்டம்‌ 1918-ன்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ அரசு / உள்ளாட்சி மன்றத்தில்‌ பதிவு பெற்ற நிறுவனங்கள்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில்‌ மூன்று வருடம்‌ முன்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

3. ஆகஸ்ட்‌ 2019-ஆம்‌ ஆண்டில்‌ SCVT திட்டத்தின்‌ கீழ்‌ சேர்க்கை செய்யப்‌ பெற்ற பயிற்சியாளர்கள்‌ இந்த Category-இன் கீழ்‌ தனித்தேர்வராக விண்ணப்பித்து NTC பெறலாம்‌. 

மேற்கண்ட நான்கு வகைகளிலும்‌ தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில்‌ தோவெழுத விரும்பும்‌ விண்ணப்பதாரர்‌ à®¤à¯Šà®´à®¿à®±à¯à®ªà®¯à®¿à®±à¯à®šà®¿ நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்‌ தகுதியை பெற்றிருக்க வேண்டும்‌.

தகுதியுள்ள 1, 3 & 4 வகையைச்‌ சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம்‌ வகையைத்‌ தவிர) முதனிலைத்‌ தேர்வுகள்‌ கருத்தியல்‌ (Theory) பாடத்தில்‌ 12.03.2020 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 13.03.2020 ஆகிய தேதிகளில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். தேர்வு மையம் பின்னர் அறிவிக்கப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜீன் 2020ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழில் தேர்வில் முதல் வருட தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தொழில் பிரிவிற்கு அனைத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு NCVT புது டெல்லி மூலம் தேசிய சான்றிதழ் வழங்கப்படும். 

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரம் அடங்கிய விளக்க குறிப்பேடு நெறிமுறைகள் மற்றும் இது தொடர்பான பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

விண்ணப்பத்துடன்‌ தேர்வு கட்டணம்‌ ரூ.200/- செலுத்தியமைக்கான செலுத்தச்‌ சீட்டு (Challan) கல்விச்சான்றிதழ்‌ à®¨à®•ல்‌ மற்றும்‌ இதர ஆவணங்களின்‌ நகல்கள்‌ ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 07.02.2020-க்குள்‌ கீழ்க்கண்ட அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய முதல்வர்களிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. கடைசி தேதிக்குப்பின் பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...