கோவையில் வரும் பிப்., 14ம் தேதி ஓய்வூதியதாரர்களின்‌ குறை தீர்ப்பு நாள்‌ கூட்டம்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டரங்கில்‌, ஓய்வூதியதாரர்களின்‌ குறை தீர்ப்பு நாள்‌ கூட்டம்‌, வருகின்ற 14.02.2020 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டரங்கில்‌, ஓய்வூதியதாரர்களின்‌ குறை தீர்ப்பு நாள்‌ கூட்டம்‌, வருகின்ற 14.02.2020 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்ததாவது;-

கோவை மாவட்டத்தில்‌ பல்வேறு அரசு துறைகளில்‌ பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம்‌ மற்றும்‌ இதர ஓய்வூதிய‌ பலன்கள்‌ இதுநாள்‌ வரையிலும்‌ கிடைக்கப்‌ பெறாமல்‌ இருப்பின்‌ இதுகுறித்து தங்கள்‌ குறைகள்‌, பணியாற்றிய அரசு துறை மற்றும்‌ எந்த அலுவலர்‌ மூலம்‌ குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்‌ போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப்‌ படிவத்தில்‌ மனுக்களை இரட்டை பிரதிகளில்‌ கோவை மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(கணக்குகள்‌) அவர்களுக்கு 05.02.2020க்குள்‌ கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல்‌ வழியாகவோ அனுப்பி வைக்கலாம்‌.

இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப்‌ படிவத்தில்‌, பெயர்‌ மற்றும்‌ முகவரி, பி.பி... எண்‌, ஓய்வு பெற்ற நாள்‌, கடைசியாக வகித்த பதவி மற்றும்‌ துறை, குறைகள்‌ விவரம்‌ (தனித்தாளில்‌ விரிவாக எழுதி படிவத்துடன்‌ இணைக்க வேண்டும்‌, முந்தைய தகவல்‌ ஏதும்‌ இருப்பின்‌ விவரம்‌ (Reference) இது தொடர்பாக வழக்கு ஏதும்‌ தொடர்ந்திருந்தால்‌ அதன்‌ விவரம்‌, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம்‌ மற்றும்‌ அலுவலர்‌ விபரங்கள்‌ இடம்‌ பெற்றி இருக்கவேண்டும்‌.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில்‌ ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ கலந்துகொண்டு பயனடைய வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...