சீர்மிகு நகரத்திற்கான (ஸ்மார்ட்சிட்டி) கணக்கெடுப்பு: கோவை நகரின்‌ பெருமை குறித்து பொதுமக்கள்‌ கருத்து தெரிவிக்கலாம் - மாநகராட்சி ஆணையர்‌

கோவை: சீர்மிகு நகரம்‌ (ஸ்மார்ட்சிட்டி) திட்டத்தின்கீழ்‌ மத்திய அரசு நாடு முழுவதும்‌ எடுக்கப்படவுள்ள கணக்கெடுப்பில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு, நமது கோவை நகரின்‌ பெருமை குறித்து தெரிவிக்கும் கருத்துக்களின்‌ அடிப்படையில்‌ தரவரிசை பட்டியலில்‌ கோவை சீர்மிகு நகரம்‌ முன்னிலை பெறும் என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவை: சீர்மிகு நகரம்‌ (ஸ்மார்ட்சிட்டி) திட்டத்தின்கீழ்‌ மத்திய அரசு நாடு முழுவதும்‌ எடுக்கப்படவுள்ள கணக்கெடுப்பில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு, நமது கோவை நகரின்‌ பெருமை குறித்து தெரிவிக்கும் கருத்துக்களின்‌ அடிப்படையில்‌ தரவரிசை பட்டியலில்‌ கோவை சீர்மிகு நகரம்‌ முன்னிலை பெறும் என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌, அவர்கள்‌ தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகரம்‌ திட்டத்தின்கீழ்‌ மத்திய அரசு நாடு முழுவதும்‌ இணையவழி கணக்கெடுப்பு எடுக்கவுள்ளது. இதன்‌ நோக்கம்‌ இந்தியாவில்‌ எந்த நகரம்‌ மக்கள்‌ வசிக்க ஏதுவாக உள்ளது என்பதாகும்‌. இதற்காக இணையவழி மக்கள்‌ வாழ்வாதார கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்காண்‌ இணையவழி கணக்கெடுப்பில்‌ சாதாரண பொதுமக்கள்‌ கலந்து கொண்டு தெரிவிக்கும்‌ கருத்துகளின்‌ அடிப்படையில்‌ நாடு முழுவதும்‌ வாழத் தகுதியான நகரங்களின்‌ தரவரிசை பட்டியலிடப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள்‌ இணையவழி கணக்கெடுப்பில்‌ பங்கேற்று நமது கோவை சீர்மிகு நகரின்‌ பெருமையையும்‌, மக்கள்‌ வசிக்க நமது நகரம்‌ எப்படி உள்ளது என்பதனையும்‌ நாட்டிற்கு பதிவு செய்யலாம்‌. இதன்‌ மூலம்‌ கோவை மாநகர மக்களின்‌ வாழ்க்கை முறை, உள்கட்டமைப்பு, சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு, மாசுக்கட்டுப்பாடு, போக்குவரத்து மற்றும்‌ பிற வசதிகளின்‌ நிலை எப்படி உள்ளது என்பதனை பதிவு செய்யலாம்‌.

மேலும்‌, மக்கள்‌ வாழ்வாதார கணக்கெடுப்பில்‌ பொதுமக்கள்‌ பங்கேற்க வாழ்வாதார குறியீட்டின்‌ மூலமாகவோ அல்லது http://eol2019.org/citizenfeedback என்ற இணையதள இணைப்பின்‌ மூலமாகவோ 01.02.2020 முதல்‌ 29.02.2020 முடிய நமது நகரம்‌ சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்‌. மேற்காண்‌ கருத்துக்கணிப்பில்‌ பொதுமக்கள்‌ அதிகளவில்‌ பங்கேற்பதன்‌ மூலம்‌ தரவரிசை பட்டியலில்‌ கோவை சீர்மிகு நகரம்‌ முன்னிலை பெற இயலும்‌. இதுவே பொதுமக்கள்‌ நமது நகரின்‌ பெருமையை சொல்ல சிறந்த வாய்ப்பாகும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...