பிற்படுத்தப்பட்டோர்‌, சிறுபான்மையினர்‌ நல விடுதியில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும்‌ கண்காட்சி - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ அரங்கத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல விடுதியில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும்‌ கண்காட்சி மற்றும்‌ கருத்தரங்கம்‌ 15.02.2020 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ அரங்கத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல விடுதியில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும்‌ கண்காட்சி மற்றும்‌ கருத்தரங்கம்‌ 15.02.2020 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது;-

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ நல அலுவலகம்‌ இணைந்து நடத்தும்‌, கோவை மாவட்டத்தில்‌ உள்ள பிற்படுத்தப்பட்டோர்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல விடுதியில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு 15.02.2020 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொழில் நெறி வழிகாட்டும்‌ கண்காட்சி மற்றும்‌ கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ குறைதீர்க்கும்‌ அரங்கத்தில்‌ நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்புகள்‌ அரசு போட்டித்‌ தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ இலவச பயிற்சி வகுப்புகள்‌, உயர்கல்வி தேசிய தொழில்‌ வேலைவாய்ப்புகள்‌, நேர்முகத்‌ தேர்வை எதிர்கொள்ளும்‌ வழிமுறைகள்‌, சுயவேலை வாய்ப்புகள்‌, சுயவேலைவாய்ப்பு கடனுதவி, பாதுகாப்புப் படையில்‌ வேலை வாய்ப்புகள்‌ மற்றும்‌ வெளிநாடுகளில்‌ வேலை வாய்ப்புகள்‌ பெறுவதற்கான வழிமுறைகள்‌, வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை திறன்‌ பயிற்சி போன்ற பல்வேறு தலைப்புகளில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொருட்டு துறை வல்லுநர்கள்‌ விளக்க உரை ஆற்றவுள்ளனர்‌.

மேலும்‌ இது குறித்து விளக்கப்படங்கள்‌, வரைபடங்கள்‌, புத்தகங்கள்‌ காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல விடுதிகளில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவ மாணவியர்கள்‌ தவறாமல்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...