கோவையில் உள்ள குழந்தைகள்‌ மற்றும்‌ மகளிருக்கான அனைத்து விடுதிகளும்‌ பதிவு செய்ய வேண்டும்‌ - மாவட்ட ஆட்சியர்‌

கோவை: கோவை மாவட்டத்தில்‌ உள்ள குழந்தைகள்‌ மற்றும்‌ மகளிருக்கான அனைத்து விடுதிகளும்‌ தமிழ்நாடு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான விடுதிகள்‌ மற்றும்‌ இல்லங்கள்‌ முறைப்படுத்தும்‌ சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ உள்ள குழந்தைகள்‌ மற்றும்‌ மகளிருக்கான அனைத்து விடுதிகளும்‌ தமிழ்நாடு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான விடுதிகள்‌ மற்றும்‌ இல்லங்கள்‌ முறைப்படுத்தும்‌ சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கையில்‌;-

கோவை மாவட்டத்திலுள்ள அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்‌, தொழிற்சாலைகள்‌, நிறுவனங்கள்‌, தனியார்‌ மற்றும்‌ மத அமைப்புகள்‌ நடத்தும்‌ வீட்டை விட்டு வெளியே தங்கும்‌ பெண்கள்‌, பெண்‌ குழந்தைகள்‌, சிறார்‌ இல்லங்கள்‌, மாணவியர்‌ விடுதிகள்‌, பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதிகள்‌ ஆகிய இல்ல வகைகளில்‌ எதுவானாலும்‌, அதனை தமிழ்நாடு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான விடுதிகள்‌ மற்றும்‌ இல்லங்கள்‌ முறைப்படுத்தும்‌ சட்டம்‌ 2014(விதிகள்‌ 2015)ன்படி பதிவு செய்யவேண்டும்‌.

மேலும்‌, பதிவு செய்யாதவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி இரண்டாண்டு வரை சிறை தண்டனையும்‌, ரூ.50,000/- வரையிலான அபராதமும்‌ விதிக்கப்படும்‌ என்பதால்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ மகளிருக்கான விடுதிகளை நடத்தும்‌ அனைவரும்‌ கட்டாயமான விடுதல்‌ இன்றி பதிவு செய்து கொள்ளவேண்டும்‌.

எனவே, கோவை மாவட்டத்தில்‌ நாளது வரை பதிவு மேற்கொள்ளாத தனியார்‌ மகளிர்‌ நிர்வாகத்தினர்‌ மேற்காணும்‌ அரசாணையின்படி உடனடியாக பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌ இது தொடர்பான விவரங்களுக்கு “மாவட்ட சமூக நல அலுவலர்‌, மாவட்டஆட்சியரக வளாகம்‌, பழைய கட்டிடம்‌ தரைதளம்‌ கோவை என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...