பேருந்துகள்‌, ஹோட்டல்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகளில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ பதிவு வைத்திருக்க வேண்டும்‌ - கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌

கோவை: ஆம்னி பேருந்துகளில்‌ பயணம்‌ செய்பவர்கள்‌ பயணிக்கும்‌ போது முறையான அடையாள அட்டை (ID Card) வைத்திருக்க வேண்டும்‌ எனவும் பேருந்துகள்‌, ஹோட்டல்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகளில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ பதிவு வைத்திருக்க வேண்டும்‌ என கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: ஆம்னி பேருந்துகளில்‌ பயணம்‌ செய்பவர்கள்‌ பயணிக்கும்‌ போது முறையான அடையாள அட்டை (ID Card) வைத்திருக்க வேண்டும்‌ எனவும் பேருந்துகள்‌, ஹோட்டல்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகளில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ பதிவு வைத்திருக்க வேண்டும்‌ என கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அலுவலக கலந்தாய்வு கூடத்தில்‌, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்‌, ஹோட்டல்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதி உரிமையாளர்கள்‌/நிர்வாகிகள்‌ கலந்தாய்வுக் கூட்டம்‌ இன்று நடைபெற்றது. மேற்கண்ட கூட்டத்திற்கு கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அவர்கள்‌ தலைமை தாங்கினார்‌.

இக்கூட்டத்தில்‌, ஆம்னி பேருந்துகளில்‌ பயணம்‌ செய்பவர்கள்‌ பயணிக்கும்‌ போது முறையான அடையாள அட்டை (ID Card) வைத்திருக்க வேண்டும்‌. ஆன்லைனில்‌ பயண சீட்டுகளை பதிவு செய்பவர்கள்‌ ஒருவரும்‌ பயணம்‌ செய்பவர்‌ வேறொரு நபராகவும்‌ இருக்கக்கூடாது, இடைப்பட்ட நிறுத்தங்களில்‌ எந்த ஒரு நபரையும்‌ சரியான காரணமின்றி ஏற்றவோ, இறக்கவோ கூடாது, காவல்துறையினரின்‌ வாகன தணிக்கை மற்றும்‌ திடீர்‌ சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்‌, ஆம்னி பேருந்துகளில்‌ ஏற்றபடும்‌ பார்சல்கள்‌ முறையாக விசாரணை செய்த பின்பே ஏற்றி சரியான இடத்தில்‌ இறக்குதல்‌ வேண்டும்‌, பேருந்துகள்‌, ஹோட்டல்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகளில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ பதிவு வைத்திருக்க வேண்டும்‌, எந்த சூழ்நிலையிலும்‌ சிசிடிவி கேமாராவை ஆப்‌ செய்யக்கூடாது, ஹோட்டல்‌ உரிமையாளர்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதி உரிமையாளர்கள்‌ / நிர்வாகிகள்‌, வெளி மாவட்ட, மாநில, வெளிநாட்டினர்‌ தங்க அனுமதிக்கும்‌ போது முறையான அடையாள அட்டை மற்றும்‌ ஆவணங்கள்‌ பெற வேண்டும்‌, சந்தேகங்கள்‌ இருப்பின்‌ உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்‌, ஆன்லைனில்‌ பதிவு செய்யும்‌ நபர்கள்‌ ஒருவரும்‌ தங்கும்‌ நபர்கள்‌ வேறொரு நபராகவும்‌ இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மேற்கண்ட உத்தரவுகளை முறையாக பின்பற்றாமல்‌, அக்காரணங்களால்‌ குற்றசசம்பவங்களோ அல்லது சட்டம்‌ ஒழுங்கு பிரச்சனையோ ஏற்படும்‌ பட்சத்தில்‌ ஆம்னி பேருந்துகளின்‌ உரிமையாளர்கள்‌ / ஓட்டுநர்கள்‌, ஹோட்டல்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதி உரிமையாளர்கள்‌ / நிர்வாகிகள்‌ ஆகியோர்‌ மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்து பேருந்துகள்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌, மேலும்‌ டிராவல்ஸ்கள்‌ மற்றும்‌ ஹோட்டல்களின்‌ உரிமங்கள்‌ ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்‌ என கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...