கொரோனா அச்சுறுத்தல்‌: வரும் மார்ச் 31ம்‌ தேதி வரை உதகை மலை ரயில்‌ போக்குவரத்து ரத்து!

நீலகிரி: கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தல்‌ காரணமாக வரும் மார்ச் 31ம்‌ தேதி வரை மேட்டுப்பாளையம்‌ முதல்‌ ஊட்டி வரை இயக்கப்பட்டு வரும்‌ மலை ரயில்‌ போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


நீலகிரி: கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தல்‌ காரணமாக வரும் மார்ச் 31ம்‌ தேதி வரை மேட்டுப்பாளையம்‌ முதல்‌ ஊட்டி வரை இயக்கப்பட்டு வரும்‌ மலை ரயில்‌ போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சீனாவின்‌ வுகான்‌ நகரில்‌ பரவத்‌ தொடங்கிய கொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌ உலகம்‌ முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌ கொரோனா வைரஸ்‌ தாக்குதலை உலக சுகாதார நிறுவனம்‌ 'சர்வதேச சுகாதார அவசர நிலை' என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ்‌ காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால்‌ உயிரிழப்பவர்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும்‌ கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவத்‌ தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால்‌ இந்தியாவில்‌ 146 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. கொரோனா வைரஸ்‌ பரவுவதை தடுக்கும்‌ நோக்கில்‌ பொது இடங்களில்‌ கூடக்கூடாது, திரையரங்குகள்‌, வணிக வளாகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களை மார்ச்‌ 31ம்‌ தேதிவரை மூடவேண்டும்‌ என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்‌, கொரோனா வைரஸ்‌ பரவல்‌ அச்சுறுத்தல்‌ காரணமாக இன்று (மார்ச் 18) முதல்‌ வரும் 31ம்‌ தேதி வரை மேட்டுப்பாளையம்‌ முதல்‌ ஊட்டி வரை இயக்கப்பட்டு வரும்‌ மலை ரயில்‌ போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...