கொரோனா எதிரொலி: மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ ரத்து - கோவை மாவட்ட ஆட்சியர்‌ அறிவிப்பு

கோவை: கொரோனா வைரஸ்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஒவ்வொரு திங்கள்‌ தோறும்‌ நடத்தப்படும்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கொரோனா வைரஸ்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஒவ்வொரு திங்கள்‌ தோறும்‌ நடத்தப்படும்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா வைரஸ்‌ பரவுவதை தடுப்பதற்கும்‌, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும்‌ பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ கோவை மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கொரோனா வைரஸ்‌ பரவுவதை தடுக்கும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெறும்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 31.03.2020 வரையில்‌ ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...