கொரோனா அச்சுறுத்தல்: வரும் 31ம் தேதி வரை கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூடப்படும் என அறிவிப்பு

கோவை: கொரோனா வைரஸ் காரணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் வரும் 31ம் தேதி வரை கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூடப்படும் என பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலக அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: கொரோனா வைரஸ் காரணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் வரும் 31ம் தேதி வரை கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூடப்படும் என பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலக அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் வரும் 31ம் தேதி வரை கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் மூடப்படும் என பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலக அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நேர்காணலுக்கு விண்ணப்பித்தவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதிக்கு பிறகு மறு நேர்காணலுக்கு வர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...