கோவை இ.எஸ்‌.ஐ மருத்துவமனை தற்காலிகமாக முழு அளவிலான கொரோனா வைரஸ்‌ பாதிப்பு சிகிச்சை மையமாக மாற்றம் - ஆட்சியர் தகவல்

கோவை: கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்‌.ஐ மருத்துவமனை முழு அளவிலான கொரோனா வைரஸ்‌ பாதிப்பு சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படுகிறது என ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்‌.ஐ மருத்துவமனை முழு அளவிலான கொரோனா வைரஸ்‌ பாதிப்பு சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படுகிறது என ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை மற்றும்‌ இ.எஸ்‌.ஐ மருத்துவமனைகளில்‌ கொரோனா வைரஸ்‌ அறிகுறி உள்ளவர்களை சோதிக்கவும்‌, சிகிச்சை அளிக்கவும்‌ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக இந்த இரு மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும்‌ தலா 100 படுக்கை வசதிகள்‌ கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், கொரோனா வைரஸ்‌ அறிகுறி உள்ளவர்களுக்கென தனியாக சோதனை மற்றும்‌ சிகிச்சை அளிப்பதற்கான வசதி செய்திட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போது சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்‌.ஐ மருத்துவமனையில்‌ கொரோனா வைரஸ்‌ தொடர்பான அனைத்து சோதனைகள் மற்றும் சிகிச்சைகளும்‌ மேற்கொள்ள பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள்‌ யாருக்கேனும் கொரோனா வைரஸ்‌ அறிகுறிகள் - சளி, இருமல்‌, தொண்டைவலி, காய்ச்சல்‌, மூச்சு திணறல்‌ போன்றவை இருந்தால்‌ நேரடியாக சிங்காநல்லூரில்‌ உள்ள இ.எஸ்‌.ஐ மருத்துவமனையினை அணுகி சோதித்து கொள்ளவும்‌, சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்‌ கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...