கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கொரோனா நிவாரணமாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: கொரோனா நிவாரணமாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:-

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு. 

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். 

ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் டோக்கன் முறையில் வழங்கப்படும்

மார்ச் மாதத்திற்கான ரேசன் பொருட்களையும் ஏப்ரலில் வாங்கிக் கொள்ள அனுமதி. 

நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக தலா ரூ.1000 வழங்கப்படும். 

இருக்கும் இடத்தை விட்டு நகரமுடியாதவர்களுக்கு அவர்கள் இடத்திற்கே சென்று சூடான சுவையான உணவு வழங்கப்படும். 

கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1000 வழங்கப்படும். 

தமிழகத்தில் உள்ள பிற மாநில அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும். 

கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 17 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...