கோவையில் தங்கியுள்ள வெளிநாட்டினர், வெளிநாட்டிலிருந்து கோவை வருகை புரிந்தவர்கள்‌ உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள்‌, வெளிநாட்டிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவாமல்‌ தடுக்க அரசு மருத்துவமனையில் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள்‌, வெளிநாட்டிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவாமல்‌ தடுக்க அரசு மருத்துவமனையில் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவாமல்‌ தடுக்க மாவட்டம்‌ முழுவதும்‌ தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட 382 பேர்‌ அவரவர்‌ வீட்டில்‌ தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்‌ துறையினரால்‌ கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

கொரோனா வைரஸ்‌ பாதிப்பின்‌ அபாயத்தைக்‌ கணக்கில்‌ கொண்டும்‌, தமிழக அரசு இதில்‌ எடுத்துவரும்‌ சிறப்பு நடவடிக்கைகள்‌ அடிப்படையிலும்‌, இந்த அறிகுறி உள்ளவர்‌ எவர்‌ ஒருவரும்‌ உரிய சோதனைக்குப்படுத்தாமல்‌ விடுபடக்கூடாது என்ற அடிப்படையிலும்‌, கோவை மாவட்டத்தில்‌ தங்கியுள்ள வெளிநாட்டினர்கள்‌, வெளிநாட்டிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள்‌ மற்றும்‌ கோவை மாவட்ட மக்கள்‌, அண்மையில்‌ வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலத்திற்கோ சென்றுவந்த நிலையில்‌ கொரோனா வைரஸ்‌ அறிகுறி உள்ளதா என அரசு மருத்துவர்களால்‌ சோதனை செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில்‌, எவரேனும்‌ இதுபோல அரசு மருத்துவமனையில்‌ சோதனை 7 செய்துகொள்ளாதவர்கள்‌ உடனடியாக சோதனை செய்து கொள்ளுமாறும்‌ இது தொடர்பாக விவரங்கள்‌, தெளிவுரை தேவைப்படின்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை (1077), துணை சுகாதார இயக்குநர்‌ அலுவலக தொலைபேசி எண் (0422. - 2220041) மற்றும்‌ ESI அரசு மருத்துவமனையினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...