கொரோனா வைரஸ் சமூக தொற்று பரவாமல் இருப்பதற்கே 144 தடை உத்தரவு; 4 நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: கொரோனா வைரஸ் சமூக தொற்று பரவாமல் இருப்பதற்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் 4 நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: கொரோனா வைரஸ் சமூக தொற்று பரவாமல் இருப்பதற்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் 4 நபர்களுக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை 5 மணி முதல் வரும் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

1. இன்று மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது.

2. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் விதிவிலக்குக்கு உட்பட்டு மூடப்படும். 

3. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.

4. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடைவிதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...