கோவையில் மார்ச் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் ரத்து - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில்‌ மார்ச்‌ 2020-ம்‌ மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ வரும் 27.03.2020 (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்‌ நடைபெறுவதாக இருந்தது.

ஆனால்‌, கொரோனா வைரஸ்‌ தடுப்பு தொடர்பான தமிழக அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி 27.03.2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ ரத்து செய்யப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கு.இராசாமணி, இ.ஆப., தெரிவித்தார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...