திருப்பூரில் 144 தடை அமலுக்கு வந்தது: கர்ப்பிணிப்‌ பெண்களின் மகப்பேறு உதவிகளுக்கான தொலைபேசி எண்ணை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர்: திருப்பூரில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், கர்ப்பிணிப்‌ பெண்களின் மகப்பேறு குறித்த உதவிகளுக்கு மருத்துவ தொலைபேசி எண்ணை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், கர்ப்பிணிப்‌ பெண்களின் மகப்பேறு குறித்த உதவிகளுக்கு மருத்துவ தொலைபேசி எண்ணை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை உத்தரவு பிறப்பித்துள்ள 144 தடை இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசின் 144 தடை உத்தரவை அடுத்து திருப்பூரில் வணிக நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டது. பேருந்து ஆட்டோ கால்டாக்சி நிறுத்தப்பட்ட நிலையில் தனிநபர் வாகனங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்ப்பிணிப்‌ பெண்கள்‌ அனைவரும்‌ வரக்கூடிய நாட்களில்‌ மகப்பேறு குறித்த உதவிகளுக்கு 90033 27166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...